முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாரியூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.18 லட்சம்

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 18 லட்சத்து 17 ஆயிரத்து 993 வசூலானது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:03 am

DIN

கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 18 லட்சத்து 17 ஆயிரத்து 993 வசூலானது.
கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இதில்  நிரந்தர உண்டியலில் ரூ.17 லட்சத்து 46 ஆயிரத்து 008-ம் ,  திருவிழா காலத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 71 ஆயிரத்து  985-ம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். மேலும் இந்த உண்டியல்களில் 88 கிராம் தங்கம், 110 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இக்கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.  உண்டியல் காணிக்கை எண்ணும் போது  ஆஸ்திரேலியா,  சிங்கப்பூர்,  இந்தோனேஷியா,  மலேசியா  ஆகிய நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் நா.பழனிக்குமார்  முன்னிலையில்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.  இதில்,  இந்து சமய அறநிலைத் துறை உதவி ஆணையர் முருகையா, செயலர் நடராஜ்,  இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கமலா ஆகியோர் கலந்து கொண்டனர். காணிக்கை எண்ணும் பணியில் கோபி பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், கம்பன் கல்வி நிலையம் மாணவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.