பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஈரோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கணக்கான

News image
Updated On :1 மார்ச் 2018, 1:48 am

DIN

ஈரோடு, கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இக்கோயில் திருவிழா பிப்ரவரி 13-ஆம் தேதி பூச்சாற்றுதலுடன் தொடங்கியது. 19-இல் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்குப் பல வகையான திரவியங்களைக் கொண்டு  சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன்  மகா தீபாரதனையும் நடைபெற்றது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்கள் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, அக்னி கபால நகர்வலம், அக்னிக் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சியும், புதன்கிழமை அக்னிக் குண்டத்தில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. 
இதையொட்டி, அதிகாலையில் கோயில் பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கினர். கடந்த இரு வாரங்களாக கங்கணம் கட்டிக் கொண்டு விரதம் மேற்கொண்டிருந்த பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், முதியவர்கள், திருநங்கைகள் உள்பட  நூற்றுக்கணக்கானோர் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
அக்னி குண்டத்தில் இறங்குவதற்காக கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர். பக்தர்களுக்கு பால், பழம், மோர், கேப்பைக்கூழ், குளிர்பானம் உள்ளிட்ட பானங்களை தன்னார்வலர்கள் வழங்கினர்.
திருவிழாவையொட்டி, பத்ரகாளியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர போலீஸார் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.