அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சென்னிமலை பூங்கா நகரில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

சென்னிமலை பூங்கா நகரில் புதியதாக அமையவுள்ள எரிவாயு உருளைக் கிடங்குக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :14 மே 2018, 7:37 pm

DIN

சென்னிமலை பூங்கா நகரில் புதியதாக அமையவுள்ள எரிவாயு உருளைக் கிடங்குக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு:
சென்னிமலை ஒன்றியம், முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உள்பட்ட பூங்கா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இப்பகுதியில் புதியாக எரிவாயு உருளைக் கிடங்கு அமைப்பதாகத் தெரிகிறது.
இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு நடத்திச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்தக் கிடங்கு அமைப்பதால் காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும், தீ விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, பூங்கா நகர் பகுதியில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.