திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் ருத்ராபிஷேக பூஜை

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மாத சிவராத்திரி வழிபாட்டுக் குழு சார்பில், ருத்ராபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :14 மே 2018, 7:36 pm

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மாத சிவராத்திரி வழிபாட்டுக் குழு சார்பில், ருத்ராபிஷேக பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பூஜையில் 11 ருத்ரர்களைக் கலசமாக வைத்து அலங்கரித்து மந்திரங்கள் ஓதி பூஜைகள் தொடங்கின. இந்த பூஜையில் கொடுமுடி ஆதீனம், சிவாச்சாரியர் பிரபு கலந்துகொண்டு 11 ருத்ரர்களுக்கு முன்பு யாகம் அமைத்து 108 ஹோம திவ்யங்களான இடம்பொறிக்காய், வலம்பொறிக்காய், நெல் பொறி, அவில், வெற்றிவேல் விலாங்குச்சி, ஏலக்காய், ஜாதிக்காய், திராட்சை, முந்திரி, ஒன்பது நவதானியங்கள், ஆப்பிள், மாதுளை முத்துக்கள், இளநீர், தேங்காய், நெய், மா, பழா, மர வேர்கள், மர பட்டைகள் என 108 திவ்யங்களை பிரபு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாக குண்டத்தில் போட்டு, மந்திரங்கள் ஓத அபிஷேக யாக பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். ருத்ர பூஜை குறித்து சிவாச்சாரியார் பிரபு கூறுகையில், உலக மக்களின் நன்மை கருதியும், மழை பெய்யவும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி இப்பூஜை நடைபெற்றதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.