முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!வீட்டிலிருந்து வேலை முறைக்கு மாறாதது ஏன்? ஸ்ரீதர் வேம்பு விளக்கம்கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! ஆயிரக்கணக்கில் இணையும் வேலையில்லா இளைஞர்கள்! மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!பொருளாதாரப் புயல் வீசப்போகிறது.. மக்களை எச்சரிக்கும் ராகுல்!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்! பழவேற்காடு மீனவர் வலையில் மர்ம பொருள்!
/

கொங்கு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

எழுமாத்தூர் பகுதியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

Updated On :25 பிப்ரவரி 2019, 10:15 am IST

எழுமாத்தூர் பகுதியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்  நடைபெற்று வருகிறது. இதில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. 
எழுமாத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை அரசு மருத்துவர் மாரிமுத்து துவக்கிவைத்தார். எழுமாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர்கள் பொங்கியண்ணன், செந்தில்குமார், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. மாலையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மேலும் பல்வேறு சுகாதாரப் பணிகளில் மாணவியர் ஈடுபட்டுவருகின்றனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சுரேஷ், அண்ணாதுரை, தியானேஸ்வரன், தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.