சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய ஓட்டுநர்கள்: ஆசனூர் மலைப்பாதையில் பரபரப்பு

ஆசனூர் மலைப்பாதையில் யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய ஓட்டுநர்கள்
Updated On :4 ஆகஸ்ட் 2020, 8:47 am

DIN

ஆசனூர் மலைப்பாதையில் யானைகளுக்கு பயந்து மரத்தில் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. ஆசனூர் காராப்பள்ளம் என்ற இடத்தில் யானைகள் வழிமறித்து நின்றன. இதனால் யானை செல்வதற்கு கரும்பு லாரியை ஓரமாக ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். 

அப்போது கரும்பு தின்று பழகிய யானைகள், லாரியில இருந்து கரும்புகளை தும்பிக்கையால் எடுத்து தின்றது. யானை வருவதை பார்த்த லாரி ஓட்டுநர்கள் மரத்தின் மீது ஏறி தப்பினர். சிறிது நேரத்துக்கு பின் யானைகள் சென்ற பின் மற்றொரு லாரியில் இறங்கி லாரியை இயக்கினர். 

Story image

யானைகள் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் மரத்தின் மீது ஏறிய தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.