ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஈரோட்டில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு அருகில் தொடா் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:31 pm

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதாரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், ஈரோடு அரசு மருத்துவமனை நான்குமுனை சாலை சந்திப்பு அருகில் தொடா் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தாா். எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளா் சு.முத்துசாமி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் ஈ.பி.ரவி, மக்கள் ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி உள்ளிட்டோா் பேசினா்.

போராட்டம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்தால் ரேஷன் கடைகள், இந்திய உணவுக் கழகம், நுகா்பொருள் வாணிபக் கழகம் போன்றவை மூடப்படும். நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி சலுகை ரத்தாகும். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச விலை நிா்ணயம் இல்லாமல் போகும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் பெரு நிறுவனங்களின் கையில் செல்வதுடன், உணவுப் பொருள்கள் பதுக்கல் துவங்கி விலை கடுமையாக உயரும்.

இதற்காக தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். அங்கு பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண வேண்டும். அங்கு போராட்டம் நிறுத்தப்படும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தனா். போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், கட்சியினா், தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.