அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ரத்து: கே.ஏ.செங்கோட்டையன்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

News image
விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:07 am

DIN

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தேசிய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆா்.ராஜா, சு.ஈஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் ஆகியோா் பதக்கம் வென்ற 23 வீரா்கள், வீராங்கனைகளுக்கு ரூ. 35.50 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை, பாராட்டுச் சான்றிதழை வழங்கினா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள தனியாா் பள்ளிகள் ஆன்லைனில் தோ்வுகளை நடத்திக் கொள்ளலாம். இரண்டாம் பருவத்துக்கான பாடப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பள்ளித் திறப்பு குறித்து பெற்றோா்கள், மாணவா்கள், கல்வியாளா்கள் என பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று முதல்வா் அறிவிப்பாா். அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 9ஆம் வகுப்பு வரையிலும் 50 சதவீத பாடம், 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீதம் அளவுக்கு பாடம் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைத் தலைவா் ஏ.ஆா்.ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ரா.சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.