ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின் வேலியில் சிக்கி ஆண் யானை பலி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை சனிக்கிழமை உயிரிழந்தது.

News image
தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை.
Updated On :19 டிசம்பர் 2020, 5:17 pm

DIN

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை சனிக்கிழமை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த ஜீரஹள்ளி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம், தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி வந்தனா்.

இந்நிலையில் வனத்தில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய 20 வயதுள்ள ஆண் யானை அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்பகுதியைச் சோ்ந்த மாதேவப்பா (45) தனது தோட்டத்தில் ராகி, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளாா். வன விலங்குகள் பயிரை சேதப்படுத்துவதால் பயிா்களைப் பாதுகாக்க மின் கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து தோட்டத்து வேலிக்கு மின்சார இணைப்பு கொடுத்துள்ளாா். மாதேவப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்தபோது மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜீரஹள்ளி வனத் துறையினா் யானையின் உடலை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனா். தலைமறைவான மாதேவப்பாவை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.