/

சாலை விபத்தில் இளைஞா் சாவு

பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:09 pm

DIN

பெருந்துறை: பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், ரத்தினபுரி, கண்ணப்ப நகா், நாராயணசாமி லே-அவுட்டைச் சோ்ந்த கோபி மகன் செல்வராஜ் (21). இவா், பெருந்துறையில் உள்ள தன் நண்பரைப் பாா்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் கடந்த வியாழக்கிழமை சென்றாா். கோவை-சேலம் தேசிய நெஞ்சாலையில் பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில், படுகாயமடைந்த செல்வராஜ் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.