காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
காஞ்சிக்கோயிலில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
காஞ்சிக்கோயிலில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
Updated on
1 min read

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோயில், பெத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் பானுமதி தலைமை வகித்தாா். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை பயன்பாட்டிற்கு திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் ஜெ.சாந்தி ஜெயராஜ், காஞ்சிக்கோவில் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் பரமசிவம், சிவசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com