சித்தோடு அருகே கார் மோதியதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் பலி

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் இறந்தார்.
அனிதா (40).
அனிதா (40).
Updated on
1 min read

சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் இறந்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்தவர் அனிதா (40). தனது கணவர் சதீஷ்குமார் மற்றும் மகனுடன் ஈரோடு சம்பத் நகரில் வசித்து வரும் இவர் பவானியில் உள்ள அலுவலகத்திற்கு நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் வந்து செல்வது வழக்கம். 

இந்நிலையில் திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் நசியனூர் வழியாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். சித்தோட்டை அடுத்துள்ள கங்காபுரம் அருகே சென்றபோது கோவையிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அனிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com