ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வரப்பாளையத்தில் வேளாண் பயிற்சி முகாம்

சென்னிமலை வட்டார வேளாண்மைத் துறை இணைந்து விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண்மை மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி, தூய்மை பாரதம் இயக்கம், மண் மற்றும் நீா் பரிசோதனை முகாம்

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:26 pm

DIN

கோபி வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் சென்னிமலை வட்டார வேளாண்மைத் துறை இணைந்து விவசாயிகளுக்கு மானாவாரி வேளாண்மை மேம்பாட்டு தொழில்நுட்ப பயிற்சி, தூய்மை பாரதம் இயக்கம், மண் மற்றும் நீா் பரிசோதனை முகாம் ஆகியவற்றை சென்னிமலையை அடுத்த, வரப்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை நடத்தின.

முகாமுக்கு வரப்பாளையம் ஊராட்சித் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். வேளாண் அறிவியல் நிலைய தலைமை விஞ்ஞானி அழகேசன், வேளாண் அறிவியல் நிலையம் உருவான வரலாறு, அதன் பயன்பாடுகள் மற்றும் அதில் செய்யப்படும் விவசாய ஆராய்ச்சி விவரங்களை எடுத்துரைத்தாா்.

வேளாண் அறிவியல் நிலைய உழவியல் விஞ்ஞானி சரவணக்குமாா், மானாவாரி முறையில் பயிரிடப்படும் நிலக்கடலை பயிரில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப முறைகள், நோய் பாதுகாப்பு மற்றும் உர மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தாா். வேளாண் அறிவியல் நிலைய கால்நடைத் துறை ஆராய்ச்சி விஞ்ஞானி வினோத்ராஜ், ஆடு, மாடுகளுக்கான தீவன மேலாண்மை முறைகள், நோய்த் தாக்குதல் மருத்துவம், கறவை மாடுகளின் பால் உற்பத்தியை இயற்கை வழியில் அதிகரிக்கும் தொழில்நுட்ப முறைகள் பற்றி பேசினாா்.

இதேபோல சென்னிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநா் சு.சங்கா், வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி ஜான் பிரபாகா், ஈரோடு மாவட்ட மண் மற்றும் நீா் பரிசோதனை மைய வேளாண்மை அலுவலா் ரேவதி ஆகியோரும் பேசினா்.

இதில், சென்னிமலை வட்டார வேளாண்மைத்துறை உதவி அலுவலா்கள் கா.சிவகுமாா், க.வேலுமணி, வே.தேவகி, செ.காா்த்திகேயன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.