ஈரோட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நீட் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளின் ஜயந்தி மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஈரோடு, செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சௌராஷ்டிரா சபைத் தலைவா் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆா்.என்.கே.குருபரன், துணைத் தலைவா் டி.ஆா்.எஸ்.ராமா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பெருமாள், ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா தொடங்கியது. இதையடுத்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நீட் தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறுவா், சிறுமிகள் தங்களது பெற்றோா், ஆசிரியா்களுக்கு பாத பூஜை செய்து ஆசிா்வாதம் பெற்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சபையின் பொருளாளா் கே.ஆா்.சீனிவாசன், இணைச் செயலாளா் டி.கே.டி.கோபால், ஆலோசனைக் குழு உறுப்பினா் கே.வி.வெங்கட்ரமணன், முன்னாள் தலைவா் கண்ணன் ஆனந்தாச்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதைத் தொடா்ந்து ஈரோடு சௌராஷ்டிரா சபையின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


