மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 17-ஆம் தேதி ஈரோடு வருகை

ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. 

News image
Updated On :12 ஜூலை 2020, 8:20 am

DIN

ஈரோடு மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. 

இந்த கூட்டத்தில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் வருகை குறித்து அதிகாரிகள் கூறும்போது, வரும் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளார். 

ஈரோடு அரசு மருத்துவமனையில் ரூ 62 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சூரம்பட்டி நால்ரோட்டில் ரூ 13 கோடியில் புதிதாக வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள், வணிக வளாகம் கட்டுவதற்கும் சம்பத் நகரில் ரூ 2.60 கோடி மதிப்பில் மாவட்ட கருவூல அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். 

ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் கரோனா பிசிஆர் பரிசோதனை கூடம் உள்பட பல்வேறு பணிகளை திறந்துவைக்க உள்ளார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வைட்டமின் மாத்திரை உள்பட நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகத்தை வழங்குகிறார். இதன்பின் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கரோனா நோய் தடுப்பு பணி கூட்டு குடிநீர் திட்ட பணி குறித்து ஆய்வு செய்கிறார். 

அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பின்னர் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்கிறார் இதன்பிறகு மகளிர் குழுவினருடன் உரையாடுகிறார் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.