சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளோடு சுற்றி திரியும் யானைகள்

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளோடு யானைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News image
Updated On :19 ஜூலை 2020, 2:33 pm

DIN

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகளோடு யானைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலைகளை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. தற்போது கொரோனா காரணமாக சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுகிறது. 

இதனால் ஆசனூர் வனச் சாலையில் காட்டு யானைகள் குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. எனவே வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இருக்குமாறும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் வகையில் யானைகளின் அருகே சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.