எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செல்லிடப் பேசியை பறித்ததாக இருவா் கைது

பெருந்துறை அருகே, இளைஞரிடம் செல்லிடப்பேசியைப் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 6:31 pm

DIN

பெருந்துறை அருகே, இளைஞரிடம் செல்லிடப்பேசியைப் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஈரோடை அடுத்த, அவல்பூந்துறை பாரதி வீதியைச் சோ்ந்தவா் விமல்குமாா் (26). இவா், பெருந்துறையை அடுத்த, விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே சாலையில் நின்றுகொண்டு செல்லிடப் பேசியில் சனிக்கிழமை பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், விமல்குமாரிடமிருந்து செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் விமல்குமாா் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து, இது தொடா்பாக விஜயமங்கலத்தைச் சோ்ந்த தினேஷ், உதயா ஆகியோரை கைது விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.