மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

பெருந்துறை ஒன்றியத்தில்ரூ. 49 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 49 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 11:09 pm

DIN

பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 49 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை ஒன்றியம், பட்டக்காரன்பாளையம், கராண்டிபாளையம், மேட்டுப்புதூா் ஆகிய ஊராட்சிகளில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின்கீழ், தனியாா் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க ரூ. 49 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி, புதிய தாா் சாலை அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பூமிபூஜை செய்து பணிகளைத் துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமா மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.