தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பவானிசாகர் அணை அருகே ஒற்றை யானை: வனத்துறை கண்காணிப்பு

பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கீழ்பவானிவாய்க்கால் வழியாக விளாமுண்டி வனத்துக்குள் சென்றது. மீண்டும் ஊருக்குள் புகாதபடி வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

News image
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.
Updated On :19 நவம்பர் 2020, 1:59 pm

DIN

பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, கீழ்பவானிவாய்க்கால் வழியாக விளாமுண்டி வனத்துக்குள் சென்றது. மீண்டும் ஊருக்குள் புகாதபடி வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றையானை, புங்கார் காலனியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. அங்கு சாகுபடி செய்த கரும்புதோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது. கிராமமக்கள் பட்டாசுகள் வெடித்து துரத்தியதில், யானை கீழ்பவானி வாய்க்கால் வழியாக விளாமுண்டி காட்டுக்குள் சென்றது. 

இதனால் இரு தினங்களாக மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரத்துவங்கினர். தற்போது மீண்டும் புங்கார் காலனிக்கு யானை வராதபடி வனத்துறையினர் குழுவாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக வனத்துறையினர் சாலையில் முகாமிட்டு அதன் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.