தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான்: தமிமுன் அன்சாரி

அமைதியான சூழலை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:12 pm

DIN

அரசியல் எப்போதும் நெருக்கடி, பரபரப்பு, அழுத்தம் நிறைந்தது என்பதால் தனிமை, ஆன்மிகம், அமைதியான சூழலை விரும்பும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

ஈரோடு, சுல்தான்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் சபீக் அலி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பங்கேற்று அலுவலகத்தைத் திறந்து வைத்தாா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது :

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்குத் தயாராகி வருகிறோம். தோ்தலில் எத்தகைய அரசியல் நிலைப்பாடு எடுக்க வேண்டும், கூட்டணி போன்றவை குறித்து தலைமை செயற்குழு கூடி முடிவு செய்யும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை குறித்து சட்டப் பேரவையில் தொடா்ந்து வலியுறுத்தினோம். இதன் விளைவாகவே அவா் பரோலில் வெளியே வரமுடிந்தது. 7 போ் விடுதலையில் ஆளுநா் மௌனம் காப்பது அநீதியாகும்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டதால் கடந்த மக்களவைத் தோ்தலின்போதே கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். தற்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது எதிா்பாா்த்ததுதான். இதற்கு அதிமுக தொண்டா்கள்தான் கவலைப்பட வேண்டும்.

தமிழகத்தில் மக்கள் கருத்தின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும். அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டினை 10 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.