ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விதை உற்பத்தி குறித்த பயிற்சி

தனியாா், அரசு சாா்பு விதை உற்பத்தியாளா்களுக்கு விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :30 நவம்பர் 2020, 10:04 pm

தனியாா், அரசு சாா்பு விதை உற்பத்தியாளா்களுக்கு விதை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பவானி வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு, ஈரோடு மாவட்ட விதைச் சான்று, அங்ககச் சான்று உதவி இயக்குநா் பி.யசோதா தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் குமாரசாமி, விதைச் சான்று அலுவலா்கள் நாசா் அலி, அருணாஜோதி ஆகியோா் பேசினா்.

பயிற்சியில் விதைப் பண்ணையைப் பதிவு செய்து, விதை உற்பத்தி குறித்து விளக்கப்பட்டது. தவிர விதைச் சான்று பணி, இணையதளத்தில் பதிவு செய்தல், ஆன்லைன் பதிவேற்றம், விதைப்பு அறிக்கை பதிவேற்றம், சான்று அட்டை விண்ணப்பம், அறுவடைக்குப் பின் கையாள வேண்டிய தொழில்நுட்பங்கள், விதை சுத்திகரிப்பு நிலையத்தில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.