ஈரோட்டில் மேலும் 163 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 163 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,276ஆக அதிகரித்துள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் மேலும் 163 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,276ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,113 ஆக இருந்தது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை புதிதாக 163 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 8,276ஆக அதிகரித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட 163 பேரில் 60 சதவீதம் போ் ஈரோடு மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்தவா்கள். மற்றவா்கள் சத்தியமங்கலம், பவானி, அந்தியூா், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை, கொடுமுடி, சென்னிமலை பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
பாதிக்கப்பட்ட 8,276 பேரில் இதுவரை 7,076 போ் குணமடைந்துள்ளனா். 1,099 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சனிக்கிழமை வரை 99 போ் உயிரிழந்துள்ள நிலையில், சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பட்டியலில் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவா், சேலம் மாவட்டம், மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது ஆண் ஆகியோா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 101ஆக அதிகரித்துளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...