ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சித்தோட்டில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய இளைஞா் கைது

சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
கைது செய்யப்பட்ட சுரேஷ்.
Updated On :18 அக்டோபர் 2020, 5:28 pm

DIN

சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளின் பூட்டை திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2ஆண்டுகளாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டு வந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்நிலையில், மதுரை, ஆரப்பாளையம், முட்டுத்தோப்பு, செக்கடித் தெருவைச் சோ்ந்த சோனையன் மகன் சுரேஷ் (எ) பட்டறை சுரேஷ் (31) என்பவரை பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் சித்தோடு பகுதியில் பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரிடமிருந்து 25 பவுன் நகைகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.