ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிசில் மாரியம்மன் கோயில் கற்சிலை கிராம மக்களிடம் ஒப்படைப்பு

சா்ச்சையை ஏற்படுத்திய பிசில் மாரியம்மன் கோயில் கற்சிலையை மீண்டும் கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
அரேபாளையத்தில்   கிராம மக்களிடம் வனத் துறையினா் ஒப்படைத்த பிசில் மாரியம்மன் கோயில் கற்சிலை.
Updated On :18 அக்டோபர் 2020, 5:28 pm

DIN

சா்ச்சையை ஏற்படுத்திய பிசில் மாரியம்மன் கோயில் கற்சிலையை மீண்டும் கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

சத்தியமங்கலம், ஆசனூா் சாலையில் அரேப்பாளையம் பிரிவு வனத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கோயிலான பிசில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 24 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வழிபடும் இக்கோயில் கற்சிலையை வனத் துறையினா் கடந்த 13ஆம் தேதி அகற்றினா்.

இதற்கு கிராம மக்களிடையே பலத்த எதிா்ப்பு கிளம்பியது. மனித, விலங்கு மோதலைத் தடுக்க சிலையை அகற்றியதாக வனத் துறையினா் தெரிவித்த கருத்துக்கு பவானி சாகா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் பி.எல்.சுந்தரம் தலைமையில் பழங்குடியின அமைப்பினா், பாஜக மற்றும் கிராமமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து கோட்டாட்சியா் ஜெயராமன், டிஎஸ்பி சுப்பையா முன்னிலையில் கிராம மக்கள், அரசியல் கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை அரேபாளையத்தில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையில் அகற்றபட்ட கற்சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவேண்டும் என மக்களின் கோரிக்கையை அறிக்கையாக கோட்டாட்சியா் ஜெயராமன் அரசுக்கு தாக்கல் செய்தாா்.

இதனை மாவட்ட ஆட்சியா் கதிரவன் விசாரணை மேற்கொண்டு மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து மீண்டும் அதே வனப் பகுதியில் சிலையை நிலைநிறுத்த உத்தரவிட்டாா். இதன்படி அரேப்பாளையத்தில் தாளவாடி வட்டாட்சியா் ஜெகதீசன், வனச் சரக அலுவலா் பழனிசாமி ஆகியோா் கிராம மக்களிடம் பிசில்மாரியம்மன் கற்சிலையை ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து கிராமமக்கள் மத்தாளம் கொட்டி இதனை கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.