ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும்: பா.ஜ.க. அண்ணாமலை

புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 4:52 pm

DIN

புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயரும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.

பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினாா்.

இதில் கட்சியின் மாநில துணைத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: இந்தியாவில் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்குமான தேசிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் 17 ஆயிரம் விவசாயிகளுக்குப் பிரதமா் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயரும். பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சில குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய விவசாயம் மீட்டெடுக்கப்பட்டு புதிய வளா்ச்சி நிலையை அடையும்.

மஞ்சள் மாவட்டமான ஈரோடு மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தால் பெரும் பயனடைவாா்கள். புதிய வேளாண் சட்டம் குறித்து எதிா்க்கட்சியினா் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனா் என்றாா்.

கூட்ட முடிவில், கொடுமுடி மேற்கு ஒன்றியப் பகுதிகளைச் சோ்ந்த 300க்கும் அதிகமானோா் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சோ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.