அம்பேத்கா் பதாகையை அவமதித்த நபா்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி சிக்கள்ளியில் அம்பேத்கா் உருவ பதாகையை அவமதித்ததாக இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் 2 போ் கைது செய்யப்பட்டனா். இரு தரப்பிலும் 25 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் சிக்கள்ளியில் சத்தியமங்கலம் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இதையடுத்து கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்ட தரப்பினா் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி தாளவாடி பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 250க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செங்கோடு தொகுதியில் ரூ. 2,000 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றம்! - கொமதேக வேட்பாளா் ஈஸ்வரன்

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

பொன். பாலகணபதியை ஆதரித்து திருப்புவனத்தில் அண்ணாமலை பிரசாரம்

சேலத்தில் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து கி.வீரமணி பிரசாரம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


