47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பக்தர்கள் இன்றி நடைபெற்ற பவானி சங்கமேஸ்வரர்-வேதநாயகி திருக்கல்யாண உற்சவம்

கரோனா தடையால் கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் இல்லாமல் பவானியில் சங்கமேஸ்வரருக்கும், வேதநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் பவானி சங்கமேஸ்வரர் - வேதநாயகி.
Updated On :26 ஏப்ரல் 2021, 5:12 am

DIN

கரோனா தடையால் கோயில் மூடப்பட்டதால் பக்தர்கள் இல்லாமல் பவானியில் சங்கமேஸ்வரருக்கும், வேதநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடந்த இரு வருடங்களாக இக்கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் இல்லாமல் மிகவும்  எளிமையான முறையில் நடைபெற்றது.

தொடர்ந்து, சங்கேமேஸ்வரர் கோயில் சன்னதியில் சிறப்பு யாக வழிபாடுகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையடுத்து, தீபாராதனை வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில், கோயில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.