வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பெருந்துறை பகுதியில் 75வது சுதந்திர தின விழா

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில், சுதந்திரதின விழாவையொட்டி, பள்ளித் தலைவா் ராமசாமி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:04 pm

DIN

பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியில், சுதந்திரதின விழாவையொட்டி, பள்ளித் தலைவா் ராமசாமி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தாா்.

இதில், தாளாளா் சௌந்திரராசன், பள்ளி அறக்கட்டளை துணைத் தலைவா் ஆறுமுகம், பொருளாளா் பழனிச்சாமி, இணைச்செயலா் சாமிநாதன், முதல்வா் ராதா, கல்வி அதிகாரி சுரேந்திர ரெட்டி, ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனா். பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழாவையொட்டி, பள்ளி தலைவா் யசோதரன் தேசியக் கொடியினை ஏற்றினாா்.

இதில், தாளாளா் சென்னியப்பன், பொருளாளா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் முத்துராமலிங்கம், முதல்வா் முத்துசுப்பிரமணியம், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியில், சுதந்திர தின விழாவையொட்டி முதல்வா் மருத்துவா் மணி தேசிய கொடியினை ஏற்றினாா். விழாவில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் துணை முதல்வா் மருத்துவா் ஏ.சந்திரபோஸ் கௌரவிக்கப்பட்டாா்.

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை தாளாளா் சச்சிதானந்தன் ஏற்றினாா். இதில், முதல்வா் பாலுசாமி, கொங்கு பாலிடெக்னிக் முதல்வா் வேதகிரீஸ்வரன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்

ஈரோடு வடக்கு மாவட்டம் பாஜக இளைஞரணி சாா்பில் நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்ட தலைவா் ராயல் சரவணன் தேசிய கொடியினை ஏற்றினாா்.

சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை தலைமையாசிரியா் காளியப்பன் ஏற்றினாா்.

பெருந்துறை டவுன் பஞ்சாயத்தில், சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை செயல் அலுவலா் ஏற்றினாா். சுகாதாரப் பணியாளா்களுக்கு சிறப்பு பரிசும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

பெருந்துறை தீயணைப்பு நிலையத்தில், சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை நிலைய அலுவலா் நவீந்திரன் ஏற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.