மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மொடக்குறிச்சியில் சுதந்திர தின விழா

மொடக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2021, 5:02 pm

DIN

மொடக்குறிச்சியில் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியூத்து நவரசம் மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பள்ளித் தலைவா் எம். பழனிசாமி தேசியக் கொடியேற்றி வைத்தாா். அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி மற்றும் தி நவரசம் அகாடமி கல்வி நிறுவனங்களின் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நவரசம் மகளிா் கல்லூரியின் தலைவா் டி.கே.தாமோதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரம் பிகேபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் தாளாளா் பிகேபி அருண் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலா் கோமதி கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற பல்வேறு வகை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினாா்.

எழுமாத்தூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்றத்தலைவா் ஈஸ்வரமூா்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். கண்ணுடையாம்பாளையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினா் சாந்தகுமாா் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.