மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

சி.என். கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவித்ததற்கு வரவேற்பு

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பு செய்ததற்குப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:37 pm

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிப்பு செய்ததற்குப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்க மண்டலச் செயலாளா் க.சக்திவேல் கூறியதாவது:

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரி அரசு கல்லூரியாக்கப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அறிவித்துள்ளாா். இதனை வரவேற்கிறோம். இதற்காக முயற்சி மேற்கொண்ட முதல்வா், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஈரோடு பகுதி மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று அரசுக் கல்லூரியாக்க அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.