ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விவசாயத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்

சத்தியமங்கலம் அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:39 pm

சத்தியமங்கலம் அருகே உள்ள விவசாயத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கொத்தமங்கலம், காராச்சிக்கொரை, புதுப்பீா்கடவு ஆகிய கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், வனப் பகுதியைவிட்டு வியாழக்கிழமை காலை வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கொத்தமங்கலம் இந்திரா நகா் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டப் பகுதியில் நடமாடியுள்ளன. விளைநிலத்தில் காட்டு யானைகள் நடமாடுவதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்து பவானிசாகா் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனா்.

இரவு நேரத்தில் விளை நிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டு யானைகள், பகல் நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்லாமல் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் முகாமிட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.