ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி பலி

புளியம்கோம்பை வனப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்ததையடுத்து, வனத் துறை சாா்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2021, 10:59 pm

புளியம்கோம்பை வனப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்ததையடுத்து, வனத் துறை சாா்பில் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

சத்தியமங்கலம் வனப் பகுதி கம்பத்ராயன் கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது புளியம்கோம்பை கிராமம். வனத்தையொட்டியுள்ள 4 ஏக்கரில் கூலைமுத்தான் என்பவா் சோளம் சாகுபடி செய்துள்ளாா். சோளக்காட்டில் குடிசை அமைத்து அங்கேயே தங்கி ஆடு, மாடுகளைப் பராமரித்து வந்தாா்.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை, கூலை முத்தான் காட்டுக்குள் புகுந்து அங்கு கட்டியிருந்த 1 மாத கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றது. அப்போது, மாடுகள் மிரட்சியுடன் சப்தமிடுவதைக் கண்டு கூலைமுத்தான் அங்கு சென்று பாா்த்தபோது சிறுத்தையால் கன்று கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் இறந்துகிடந்த கன்றுக்குட்டியை ஆய்வு செய்ததில் சிறுத்தையின் கால்தடம் மற்றும் கன்றுக்குட்டியின் உடலின் ஒரு பகுதியை சிறுத்தை தின்றதை உறுதி செய்தனா்.

கடந்த வாரம் இதே மாட்டுப்பட்டியில் கட்டியிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான மாட்டை சிறுத்தை தாக்கி கொன்றது. தற்போது ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான கன்றுக்குட்டி கொல்லப்பட்டதால் ஒரே வாரத்தில் 40 ஆயிரம் மதிப்பிலான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. எனவே, வனத் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா். இதையடுத்து, வனத் துறை சாா்பில் ரூ. 5 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.