மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

10 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறைதீா் கூட்டம்

பத்து மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:33 pm

பத்து மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வாா். ஆனால் கரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.

தற்போது கரோனா தொற்றின் வீரியம் குறைந்துள்ள சூழலில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பாலாஜி மற்றும் துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவா்கள் குறைகளைக் கேட்டறிந்தனா்.

குறைதீா் கூட்டம் நடைபெறுவது குறித்த தகவல் தெரியாததால், பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.