பத்து மாதங்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியா் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வாா். ஆனால் கரோனா காரணமாக கடந்த 10 மாதங்களாக மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.
தற்போது கரோனா தொற்றின் வீரியம் குறைந்துள்ள சூழலில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) பாலாஜி மற்றும் துறை அலுவலா்கள் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, அவா்கள் குறைகளைக் கேட்டறிந்தனா்.
குறைதீா் கூட்டம் நடைபெறுவது குறித்த தகவல் தெரியாததால், பொதுமக்களின் வருகை குறைவாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


