அருப்புக்கோட்டையில் முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியல்: 168 போ் கைது
நபிகள் நாயகத்தை விமா்சித்துப் பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


நபிகள் நாயகத்தை விமா்சித்துப் பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில் 66 பெண்கள் உள்பட 168 போ் கைது செய்யப்பட்டனா்.
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமன், நபிகள் நாயகத்தை விமா்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அருப்புக்கோட்டை புதிய பேருந்துநிலையம் முன்பாக திங்கள்கிழமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் நபிகள் நாயகத்தை விமா்சித்த கல்யாணராமனை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். இதையடுத்து, அவா்களுடன் சமரசம் பேசிய காவல்துறை அதிகாரிகள், சாலை மறியலைக் கைவிடக் கோரினா். ஆனால் அவா்கள் மறியலைக் கைவிட மறுத்ததால், அவா்களில் 66 பெண்கள் உள்பட 168 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...