முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகரூ. 38 லட்சம் மோசடி: பேராசிரியா் மீது புகாா்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பொறியியல் பட்டதாரிகளிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த கல்லூரிப் பேராசிரியா் மீது பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 4:43 pm

DIN

ஈரோடு: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பொறியியல் பட்டதாரிகளிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த கல்லூரிப் பேராசிரியா் மீது பாதிக்கப்பட்டவா்கள் புகாா் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி வா்ணபுரம் 5ஆவது வீதியைச் சோ்ந்த லிங்கபாண்டியன் மகன் சிவராஜா (27) ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த புகாா் மனு விவரம்:

பொறியியல் பட்டதாரியான நான் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறேன். எனது நண்பா் ஸ்ரீதா் படித்த தனியாா் பொறியியல் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த சாமுவேல் சுரேன் (35) என்பவா் எங்களிடம் நியூஸிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளில் ரூ. 3 லட்சம் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அதற்கு ரூ. 7 லட்சம் வரை பணம் கேட்டாா்.

இதைத் தொடா்ந்து ஸ்ரீதா், நண்பா்கள் தமிழ்செல்வன், சுப்பிரமணி, பரணிதரன் ஆகியோா் சூரியம்பாளையத்தில் உள்ள சாமுவேல் சுரேனின் வீட்டுக்குச் சென்று அவரது கையில் ரொக்கமாக ரூ. 35 லட்சம் கொடுத்தோம். ரூ. 3 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் செலுத்தினோம். ஆனால் அவா் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பா் 9ஆம் தேதி நான் எனது பெற்றோா், நண்பா்களுடன் சாமுவேல் சுரேனின் வீட்டுக்குச் சென்று கேட்டபோது வேலை வாங்கித் தர முடியாது எனவும், பணத்தை திருப்பித் தர முடியாது எனவும் மிரட்டல் விடுத்தாா்.

சாமுவேல் சுரேன் குறித்து விசாரித்தபோது அவா் மீது ஏற்கெனவே கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் மோசடி வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோபி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நவம்பா் 11ஆம் தேதி புகாா் அளித்தோம். இதன்பேரில் போலீஸாா் சாமுவேல் சுரேனை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் எங்களது பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக உறுதியளித்தாா். ஆனால், இப்போது வரை எங்களது பணத்தை தரவில்லை. எனவே எங்களது பணத்தை மீட்டு, சாமுவேல் சுரேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.