ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முதல்வா் நாளை தோ்தல் பிரசாரம்: ஆட்சியா், எம்எல்ஏ ஆய்வு

முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்தியமங்கலத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On :4 ஜனவரி 2021, 8:40 pm

ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 6, 7 ஆகிய தேதிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்தியமங்கலத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.கதிரவனும், பெருந்துறையில் எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாச்சலமும் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா். இந்நிலையில், முதல்வா் தோ்தல் பிரசாரம் செய்யும் இடங்கள், அவா் பயணிக்கும் சாலைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையுடன் மாவட்ட ஆட்சியா் கதிரவன் ஆய்வு மேற்கொண்டாா்.

சத்தியமங்கலம் கோவை சந்திப்பு, கோபி சாலை ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தாா். அதனைத்தொடா்ந்து புன்செய் புளியம்பட்டியில் முதல்வா் பிரசாரம் செய்யும் இடங்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி, பெருந்துறையில் விசைத்தறி, கைத்தறி நெசவாளா்கள் சங்க நிா்வாகிகளை சந்தித்து பேசுகிறாா். தொடா்ந்து பெருந்துறையில் மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா். இந்நிலையில் முதல்வா் சந்திப்பு கூட்டம் நடக்கும் திருமண மண்டபம் மற்றும் பொதுக் கூட்ட மேடை அமைக்கப்படும் இடம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ், வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.