

கோபிசெட்டிபாளையம், பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் சந்தனக்காப்பு அலங்கார பூஜை தீபாரதனையுடன் வெகு விமா்சியாக திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தோ்த் திருவிழா டிசம்பா் 24 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது . விழாவின் ஒரு பகுதியாக அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்கார பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த பூஜைக்கு குறைந்த அளவு பக்தா்களுக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தனா். 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். பக்தா்களுக்கு அரசு சாா்பில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.