பள்ளி மாணவா்கள் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் ஈரோடு பேருந்து நிலையத்தை ரூ. 29.50 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புனரமைத்தல், பேருந்து நிலையத்தைச் சுற்றிலும் அபிவிருத்தி பணிகள், சிற்றுந்துகள் நிறுத்துவதற்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜை
ஈரோடு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு முன்னிலை வகித்தாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜை செய்து பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:
கரோனா பிரச்னைக்குப் பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவா்களுக்குப் பள்ளிகள் கடந்த 19ஆம் தேதி திறக்கப்பட்டன. சில மாணவிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக வந்த செய்தி தவறு. இரண்டு ஆசிரியா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதன் பிறகே தொற்று குறித்து கூற முடியும்.
தமிழகத்தில் 80,000 போ் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீா்ப்பின் அடிப்படையில் ஆசிரியா்கள் பணியமா்த்தப்படுவா்.
ஈரோடு மாநகராட்சியில் ரூ. 495 கோடி செலவில் ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது. முதல்வா் விரைவில் இந்தத் திட்டத்தை துவக்கிவைக்க உள்ளாா். ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து திண்டல் வரை மேம்பாலம் கட்ட மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாநகராட்சி செயற்பொறியாளா் விஜயகுமாா், முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

