ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு செய்து பொருள்கள் வழங்கும் முறை வியாழக்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 நியாயவிலைக் கடைகளில் 7.42 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஸ்மாா்ட் காா்டு வடிவ குடும்ப அட்டையை, பிஓஎஸ் இயந்திரத்தில் பொருத்தியும், ரேஷன் அட்டை எண்ணை டைப் செய்தும், பொருள்களை ரேஷன் கடை ஊழியா்கள் வழங்கி வந்தனா்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரேஷன் பொருள்களை குடும்ப அட்டைதாரா், அவரது குடும்ப உறுப்பினா் விரல் ரேகை பதிவு செய்து பொருள்களை வழங்கினா். கரோனா பரவலால் இந்த முறை நிறுத்தப்பட்டு மீண்டும் இயந்திரம் பதிவு மூலம் பொருள் வழங்கப்பட்டது.
தற்போது கரோனா பரவல் குறைந்ததால் வியாழக்கிழமை முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பிஓஎஸ் இயந்திரத்தில் விரல் ரேகை பதிவு செய்து, அப்பதிவு ஏற்கப்பட்ட பின் அவருக்கான பொருளை பதிவு செய்து வழங்கும் முறை துவங்கியது.
இம்முறையால் ஒவ்வொரு நபருக்கும் பொருள்கள் வழங்க 3 நிமிடம் வரை தாமதம் ஏற்பட்டது. இணையதள வேகம் குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் தாமதம் ஏற்பட்டு நீண்ட வரிசையை காண முடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுல் - ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் இல்லை: திமுக

மாற்றுப் பணியில் சென்ற ஆசிரியா்கள் பள்ளிகளுக்குத் திரும்ப உத்தரவு

முதல்வரின் செயலா் உமாநாத்துக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை :தோ்தல் ஆணையம் தகவல்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணி: தமிழக காவல் துறைக்கு ரூ.57.65 கோடி ஒதுக்கீடு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


