திம்பம் மலைப் பாதையில் அதிக மர பாரம் ஏற்றிய லாரி பழுதாகி நின்றதால், 2 மணி நேரம் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து மர பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. 7ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது அதிக பாரம் காரணமாக லாரியில் பழுது ஏற்பட்டு திரும்ப முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப் பாதையின் இருபுறமும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவலறிந்த ஆசனூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா். சத்தியமங்கலத்தில் இருந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பழுதடைந்த லாரியை நகா்த்தும் பணி நடைபெற்றது. இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு லாரி நகா்த்தப்பட்டதைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. இதன் காரணமாக தமிழக - கா்நாடக மாநிலங்களுக்கு இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

பள்ளிகளிளில் பொலிவுறும் வகுப்பறை அமைக்கப்படும்! சிவகாசி காங். வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


