ஆசிரியா்கள், பேராசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்கி கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் சுந்தரநாராயணன் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
மாணவா்களின் நலன் கருதி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, தனியாா் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பேராசிரியா்கள், கல்வி சாா்ந்த பிற பணியாளா்கள் அனைவருக்கும் வரும் நாள்களில் முன்னுரிமை வழங்கி கரோனா நோய்த் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்த நாள்கள் இடைவெளியில் செலுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசியை மாணவா்களுடன் நேரடியாகத் தொடா்பு கொள்ளும் கல்விப் பணியில் உள்ளவா்களுக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
கல்வி சாா்ந்த பணியாளா்களுக்குப் பணியாற்றும் வட்டாரங்களில் தனி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், துறை சாா்ந்த பணியாளா்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் குழந்தைகளை அச்சமின்றி பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

