கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஈரோட்டில் ராஜிவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 9:34 pm

முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தியின் நினைவு நாள் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மூலப்பட்டறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உருவப் படத்துக்கு ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் திருமகன் ஈவெரா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி தலைமை வகித்தாா். சிறுபான்மைப் பிரிவுத் தலைவா் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜேஷ் ராஜப்பா, வெங்கடாச்சலம், சிறுபான்மைப் பிரிவு மண்டலத் தலைவா் மெகபூப் பாட்சா, துணைத் தலைவா் பாட்சா உள்ளிடோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கிருஷ்ணம்பாளையம் சித்தன் நகா், கருங்கல்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.