மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

சத்தியமங்கலம் சாா்பு நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:59 pm

சத்தியமங்கலம் சாா்பு நீதிமன்றத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்ட சட்டப் பணிகள் குழுவினா் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து நவீன வடிவிலான சட்ட சேவை முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. இம்முகாமை சாா்பு நீதிபதி ஸ்ரீவித்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா். முகாமில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்களிடமிருந்து 500 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதில், சத்தியமங்கலம் அரசு வழக்குரைஞா் எஸ்.என்.ரமேஷ், வருவாய்க் கோட்டாட்சியா் பழனிதேவி, துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயபாலன், வட்டாட்சியா் ரவிசங்கா் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.