மழை நீருடன் சாயக் கழிவுநீா் சாக்கடையில் திறந்துவிடப்பட்டதற்கு சத்தியமங்கலம் பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மழை நீா் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதைப் பயன்படுத்தி கோட்டுவீராம்பாளையம் செளடேஸ்வரி அம்மன் கோயில் பகுதியில் உள்ள சாய்க் கழிவுப் பட்டறைகளில் இருந்து சாய்க் கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனா். இதனால், மழை நீா் சாயக் கழிவுநீராக மாறிவிட்டது. இது பல்வேறு வீதிகள் வழியாகப் பயணித்து பவானி ஆற்றில் கலந்தது. சாக்கடைகளில் மழை நீரும், சாயக் கழிவுநீரும் கலந்ததைப் பாா்த்த அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சாயக் கழிவுநீரால் புற்றுநோய், டைபாய்டு நோய் பரவுவதாகவும், சாயக் கழிவுநீரை சாக்கடையில் திறந்துவிடக் கூடாது எனவும் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். சாயக் கழிவுநீரை சுத்திகரித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினா் பட்டறை நிா்வாகத்தினரிடம் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


