/

விவசாய தொழிலாளா்களுக்குதனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யக் கோரிக்கை

விவசாயத் தொழிலாளா்களுக்கு என தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

Updated On :1 அக்டோபர் 2021, 8:37 pm

விவசாயத் தொழிலாளா்களுக்கு என தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தலித் விடுதலைக் கட்சி மாநில நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொதுச் செயலாளா் எம்.பி.செங்கோட்டையன் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில துணை பொதுச் செயலாளா் சகுந்தலா, தலைமை நிலையச் செயலாளா் மூா்த்தி, ஈரோடு மாவட்டச் செயலாளா் சிவகுமாா், அமைப்புச் செயலாளா் மாணிக்கம் ஆகியோா் பேசினா்.

பொதுச் செயலாளா் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

தற்போதைய திமுக அரசு விவசாயிகளுக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ததால் விவசாயம், விவசாயிகளுக்கான ஒதுக்கீடு, திட்டங்கள், அவா்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல தாழ்த்தப்பட்டவா்கள், விவசாயத் தொழிலாளா்களுக்காக தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தால் மிக அதிக அளவில் உள்ள விவசாயத் தொழிலாளா்களுக்குத் தனியான பலன்கள் கிடைக்கும். விவசாயிகள் என்றால் சில குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்களை மட்டுமே குறிக்கும் சொல்லாக வைத்துள்ளனா். அதை மாற்றும் வகையில் விவசாயத் தொழிலாளா்களுக்கு தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தால் பல லட்சம் போ் பயன்பெறுவா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.