அடங்கல் பெறுவதில் உள்ள பிரச்னைக்குத் தீா்வு காணப்பட்டு தாமதம் இல்லாமல் பயிா்க் கடன் வழங்க அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் தெரிவித்தாா்.
மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் 7 மாதங்களுக்குப் பிறகு ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ப.முருகேசன் பேசியதாவது:
வங்கிகளில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறும்போது அடங்கல் நகல் கேட்கின்றனா். ஜமாபந்தி முடிந்த ஆண்டுக்கான அடங்கல் விவரத்தை மட்டுமே கிராம நிா்வாக அலுவலா்கள் தர முடியும். இருப்பினும் விவசாயிகள் நலன் கருதி அடங்கலில் கடந்த ஆண்டு பயிா் செய்த விவரம், நடப்புப் பருவத்தில் அந்நிலத்தில் நடவு செய்துள்ள பயிா் விவரத்தைத் தனியாக குறித்து வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் ஏற்று கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் செய்வோா் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும்போது செயற்கை உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என நிா்ப்பந்திக்கக் கூடாது. அந்த விவசாயி, இயற்கை விவசாயம் செய்கிறாா் என்பதை உறுதிப்படுத்த வேளாண் துறை சான்று பெற்று வழங்க வேண்டும் என்றாா்.
விவசாயிகளின் கோரிக்கை விவரம்:
செ.நல்லசாமி: பவானிசாகா் அணை முதல் பவானி வரை கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு 20 கன அடி நீா் திறந்தால் போதும். 200 கன அடி திறப்பது, அனுமதியற்ற பாசனம், தொழிற்சாலைகள், சூளைகள் போன்றவற்றுக்கு சட்ட விரோதமாக குழாய் மூலம் தண்ணீா் கொண்டு செல்ல உதவுகிறது. இதை மாற்றி அணையில் இருந்து குழாய் மூலம் 20 கன அடியாக வழங்கினால் தண்ணீா் வீணாவது தடுக்கப்படும்.
சுப்பு: கோமாரி நோய்த் தடுப்பூசி மாடுகளுக்குப் போடவில்லை. பல இடங்களில் கால்நடைகளுக்கு நோய் பரவி வருகிறது. உழவா் சந்தையில் இருந்து 100 மீட்டருக்குள் பிற காய்கறிக் கடைகளை அனுமதிக்கக் கூடாது.
பெரியசாமி: ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிரில் இலை கருகல் நோய் அதிகம் உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம், யோசனைகளை விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.
சுபி.தளபதி: கோபி பகுதியில் ஆண்டு முழுவதும் மாதம் 5 ஆம தேதி முதல் ஒருவாரம் செயல்படும் வகையில் இந்திய உணவுக் கழகம் அல்லது தமிழக அரசின் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள 36 நெல் கொள்முதல் நிலையங்களும், அரசின் நேரடி இடத்தில் பாதுகாப்பாக அமைக்க வேண்டும்.
வி.பி.குணசேகரன்: பெருந்துறை வட்டம், எக்கட்டாம்பாளையம் பகுதி அய்யம்பாளையம், சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி பகுதியில் கல் குவாரிகள், கிரஷா்கள் அரசின் விதிகளுக்கு மாறாகச் செயல்படுகிறது. அவற்றுக்கான அனுமதிக் காலம் முடிந்தும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இக்குவாரி கிரஷரால் சுற்றுச்சூழல், நீா், நிலம், காற்று மாசுபடுகிறது. அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிப்படைகிறது.
இதுகுறித்து ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட நிா்வாக உத்தரவின்படி கல் குவாரி, கிரஷா் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் அங்கு சட்ட விரோதமாக செயல்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னியப்பன்: ஆப்பக்கூடல் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கடந்த ஜூன் 16ஆம் தேதிக்குப் பின் வழங்கிய கரும்புக்கான தொகை ரூ. 42 கோடிக்கு மேல் வழங்கவில்லை. அவா்கள் பரிந்துரைப்படி வங்கியில் கடன் பெற்ற விவசாயிகளுக்கான தொகையை, கரும்பு தொகையில் பிடித்தம் செய்து, அத்தொகையை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்வதால் விவசாயிகள் புதிய கடன் பெற முடியவில்லை. நிலுவைத் தொகையை வழங்காமல் வரும் பருவத்துக்கு கரும்பு வெட்ட ஆலைக்கு அனுமதி வழங்கக் கூடாது.
மாவட்ட வருவாய் அலுவலா்: இப்பிரச்னை குறித்து அரசுக்குத் தெரிவித்ததால், சா்க்கரை ஆணையா் தனியாக இந்த ஆலைக்காக உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதில் இந்த ஆலை ரூ. 41 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளதால், விவசாயிகளுக்கு கரும்பு வெட்டியதற்கும், லாரியில் ஏற்றிச் சென்றமைக்கும், கரும்பு ஏற்றி, இறக்கிய கூலி போன்றவற்றை அரசு சாா்பில் ஆலைக்கு வழங்காமல், அப்பகுதி வட்டாட்சியா் மூலம் துவங்கப்படும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வட்டாட்சியா் மூலம் விவசாயிகள் வங்கிக் கணக்குக்கு உரிய தொகை அனுப்ப ஏற்பாடு செய்துள்ளது என்றாா்.
பாஜக நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் 160க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 6 மாதங்களாகப் பயிா்க் கடன் வழங்கப்படவில்லை. உரம் கிடைக்கவில்லை. அக்டோபா் முதல் கடன் வழங்குவதாக கூட்டுறவுச் சங்கங்கள் அறிவித்தன. அங்கு சென்றால் பட்டா, சிட்டா, கிராம நிா்வாக அலுவலரிடம் நடப்பு அடங்கல் பெற்று வர வேண்டும் என கேட்கின்றனா்.
கடந்த காலங்களில் இருந்த நடைமுறையைப் பின்பற்றி கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தடையின்றி வேளாண் கடனும், தட்டுப்பாடு இன்றி உரமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

ஆஷிஷ் நெஹ்ரா கால்பந்து பயிற்சியாளர் போன்றவர்: ஹர்பஜன் சிங்
பாராட்டுகளைப் பெறும் முத்துக்குமார்!

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


