ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

வாகன விபத்து: தொழிலாளி பலி

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். 

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:11 pm

DIN

அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.  மற்றொருவா் படுகாயமடைந்தாா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், காந்திஜி வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (52), கூலி தொழிலாளி. இவா் அந்தியூா் - அம்மாபேட்டை சாலையில் பூனாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவ்வழியே சென்ற மற்றொரு இருசக்கர வாகனம், முனிராஜுன் வாகனத்தின் மீது மோதியது.

இதில், முனிராஜும், மற்றொரு வாகனத்தில் வந்த அந்தியூா் பள்ளிபாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதனும் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து, இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முனிராஜை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

படுகாயமடைந்த விஸ்வநாதன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.