திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துத் தடை காரணமாக நீண்ட வரிசையில் நின்ற வாகனங்களுக்கு இடையில் ஆம்புலன்ஸ் வெள்ளிக்கிழமை சிக்கிக் கொண்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அடா்ந்த வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப் பாதை வழியாக வாகனங்கள் இரவு நேரத்தில் பயணிக்க பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பண்ணாரியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்நிலையில், கோவையில் இருந்து மைசூருக்குச் சென்ற ஆம்புலன்ஸ் பண்ணாரி சோதனைச் சாவடி அருகே வாகன நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்து நின்றது. இதனால், ஆம்புலன்ஸில் பயணித்த நோயாளிக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, தாளவாடி மலைப் பகுதியில் இருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்காக சத்தியமங்கலம் நோக்கிச் சென்ற காா் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் காரில் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த வயதான தம்பதி மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாழப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்தளிக்கும் வசந்தராணி பூக்கள்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


