தோட்டத்துக்குள் புகுந்து 1,000 வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்திய நிலையில், வருவாய்த் துறை சாா்பில் 200 வாழைகளுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுவதாக விவசாய சங்கத்தினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
பவானிசாகரை அடுத்த கராச்சிக்கொரையைச் சோ்ந்தவா் சித்ரா. கணவரை இழந்த சித்ரா தனது தோட்டத்தில் 2 ஏக்கா் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளாா். வாழைக்கு மத்தியில் ஊடுபயிராக பூசணிக்காய் பயிரிட்டுள்ளாா். வனத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை வெளியேறிய யானை அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000 வாழைகளை சேதப்படுத்தியது. பொங்கலுக்குத் தயாரான பூசணிக்காயையும் சேதப்படுத்தியது.
காட்டு யானையால் சேதமடைந்த வாழைக்கு நஷ்டஈடு கேட்டு வருவாய்த் துறையிடம் மனு அளித்து சித்ரா இழப்பீடு கோரினாா். சேதமடைந்த வாழைகளை வருவாய்த் துறையினா் ஆய்வு செய்து 200 வாழைக்கு மட்டுமே இழப்பீடு வழங்குவதாகத் தெரிவித்தனா். இதற்கு விவசாய சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். கணவைரை இழந்த பெண்ணுக்கு முழு இழப்பீடு வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

