வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அந்தியூர் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: இருவர் பலி

அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் மீது எதிரில் வந்த லாரி மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

News image
அரசு பேருந்து நடத்துநர் கார்த்தி | ரவி
Updated On :7 ஜனவரி 2022, 7:43 am

DIN

பவானி: அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் மீது எதிரில் வந்த லாரி மோதியதில் அரசு பேருந்து நடத்துனர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

ஒலகடம், நாகிரெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் ரவி (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன்  கார்த்தி (35). அந்தியூர் கிளையில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றுகிறார். இருவரும் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் அந்தியூரில் இருந்து நாகிரெட்டிபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.

அந்தியூர் - அம்மாபேட்டை சாலையில் கெம்மியம்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்தி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து, வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.